BREAKING NEWS
latest

Malaysia News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Malaysia News News, Articles, Malaysia News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Monday, April 26, 2021

மலேசியா மற்றும் இந்தியா இடையேயான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

மலேசியா மற்றும் இந்தியா இடையேயான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது;வருகின்ற புதன்கிழமை முதல் உத்தரவு நடைமுறையில் வருகின்றன

மலேசியா மற்றும் இந்தியா இடையேயான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

மலேசியா மற்றும் இந்தியா இடையேயான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கபடுகின்றன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நாளை மறுநாள்(28/04/21) புதன்கிழமை முதல் உத்தரவு நடைமுறையில் வருகின்றன எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மரபணு மாற்றம் ஏற்பட்ட வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றன நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதரத்துறை பரிந்துரை அடிபடையில் தேசிய பாதுகாப்பு மையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நாடு எ தற்காப்பு துறை அமைச்சர் இசாக் சரபிநார் கூம் அறிவித்தார்.

மேலும் அறிக்கையில் இந்தியாவில் இருந்து வருகின்ற நபர்கள் மற்றும் இந்தியாலிருந்து மலேசியா வழியாக மற்ற இடங்களுக்கு செல்ல வருகின்றன பயணிகளுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும் எனவும், நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது . ஆனால் மலேசியா குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் இந்தியாவில் இருந்து புறப்பட்ட கப்பல்கள் 14 நாட்கள் மலேசியா துறைமுகங்களில் நங்கூரம் இடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் அந்த கப்பல்களில் உள்ள மலேசிய பணியாளர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to Malaysia News

Tuesday, December 15, 2020

மலேசியாவுக்கு 50 பேருக்கு போலி விசா;மடக்கி பிடித்த வட மாநில இளைஞர்கள்:

Dec-15,2020

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்களை, பாதிக்கப்பட்டவர்களே ஒன்று சேர்ந்து ஒரே இரவில் சினிமா பாணியில் சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

ஒடிசாவை சேர்ந்த ராஜூ என்பவன் அதே மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 பேருக்கு, மலேசிய நாட்டில் கட்டிட வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளான். அனைவரையும் விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்து முன்பணமாக சுமார் 10 ஆயிரம் ரூபாயை வசூல் செய்தவன், மலேசியாவுக்கு செல்வதற்கான முழு தொகையான 50 ஆயிரத்தில் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாய் பணத்தை விசா தயாரானதும் கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளான்.

பிறகு விசா தயாராகிட்டதாக கூறிய ராஜூ, ஐம்பது பேரையும் இரு தினங்களுக்கு முன் சென்னைக்கு வரவழைத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை எதிரேயுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளான். ஞாயிற்றுக்கிழமை அந்த விடுதிக்கு ராஜுவின் நண்பர்களான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ராத் குமார் போலோ என்பவனுடன் ஐந்து பேர் வந்து, அங்கிருந்த 50 பேருக்கும் மலேசிய நாட்டிற்கு செல்வதற்கான விசாவை கொடுத்திருக்கின்றனர்.

பின்னர், அனைவரிடமிருந்தும் தலா 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, திங்கட்கிழமை காலை 9 மணிக்கு விமான நிலையத்தில் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பணம் கொடுத்த ஐம்பது பேரில் ராஜேஷ் குமார் மதன் என்பவர் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர். அவர் தனக்கு அளிக்கப்பட்ட விசாவில் உள்ள பார்கோடை அருகில் உள்ள இன்டர்நெட் மையத்தில் கொண்டு சென்று சோதித்துப் பார்த்துள்ளார்.

அதில் மலேசியா செல்வதற்கான எந்த விவரங்களும் வராததால் அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுப்ராத் குமார் போலோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது உடனடியாக அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு நேரில் வருவதாகவும், அதற்கு முன்பாக வேறு இன்டர்நெட் மையத்தில் சென்று சோதியுங்கள் எனவும் கூறியுள்ளான்.

மற்றொரு இன்டர்நெட் மையத்தில் விசா பார்கோடை சோதனை செய்தபோதும் எந்தவித தகவலும் வரவில்லை. இந்த முறை சுப்ராத் குமார் போலோவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவனது செல்போன் உட்பட கூட்டாளிகள் அனைவரது செல்போன்களும் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுதாரித்த 50 பேரும் தியாகராய நகர் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையம், விமான நிலையம் என ஐந்து குழுக்களாக பிரிந்து தேடியுள்ளனர். இதில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தேடிக் கொண்டிருந்த குழுவின் கண்களில் சுப்ராத் குமார் போலோ உட்பட ஐந்து பேரும் சிக்கினர். அவர்கள் பெங்களூருக்கு தப்பிச்செல்ல இருந்தது தெரியவந்தது. 5 பேரையும் துரத்தியபோது மூன்று பேர் தப்பியோடிய நிலையில், ராஜேஷ்குமார் பாண்டா, தினேஷ் பட்ரா என இருவர் மட்டும் சிக்கினர்.

பிடிபட்ட இருவரையும் உடனடியாக அருகில் உள்ள கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய கோயம்பேடு போலீசார், சம்பவம் நடைபெற்ற அனைத்து இடங்களும் பூக்கடை காவல் மாவட்டதிற்கு உட்பட பகுதி என்பதால் பூக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

கடந்த 2 ஆயிரமாவது ஆண்டில் வெளிவந்த “வெற்றிக் கொடிகட்டு” திரைப்படத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றும் வில்லனை, பாதிக்கப்பட்டவர்கள் தேடிப்பிடித்து போலீசில் ஒப்படைப்பர். அதே பாணியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜண்டுகளின் பின்னணியை கவனமாக ஆராய்ந்த பிறகு பணம் செலுத்த வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.


Add your comments to Malaysia News

Monday, October 21, 2019

மலேசியாவில் உள்ள இந்தியர்கள் அவசியமாக அறிந்திருக்க வேண்டிய இந்திய தூதரக தொடர்பு எண்கள்:


மலேசியாவில் உள்ள இந்தியர்கள் அவசியமாக அறிந்திருக்க வேண்டிய  இந்திய தூதரக தொடர்பு எண்கள்:

Shareall......




முதலாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் & ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள் உதவி கோருவதற்காக அழைக்கவேண்டிய எண்:- +603-61431152

யாராவது இந்தியர்கள் இறந்தவர்கள் உடல்கள் அனுப்புவதற்கான தகவல் பெறுவதற்கான தொடர்பு எண்:-
+603-61438849

மலேசியாவில் சட்டப்படி இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றி & கேம் மற்றும் ஜெயில் சம்பந்தப்பட்ட தகவல் பெறுவதற்கான எண்: +603-62010091

இந்த எண்களில் தொடர்புகொண்டு உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.தமிழ் மொழியில் தகவல் பெற்றுகொள்ளலாம்.
அப்படி தகவல் திருப்தி அளிக்கவில்லை என்றால் கீழ்காணும் முகவரியில் உள்ள இந்திய தூதரகத்தை அனுகவும்
முகவரி:-

HIGH COMMISSION OF INDIA
LEVAL 20,MINARA 1, MONT KIARA,
NO.1, JALAN MONT KIARA,
50480 KUALA LUMPUR,
WILAYAH PERSEKUTUAN.

Source: மலேசியா தமிழ் உதவிக்குழு

Add your comments to Malaysia News

Thursday, July 18, 2019

மலேசியாவில் இன்று சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இன்று சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது:


      

மலேசியாவில் இன்று வியாழக்கிழமை (18/07/2019) குடிவரவு சட்டம் 1959/63 (சட்டம் 155) இன் கீழ் குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு தானாக முன்வந்து நாடு திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் விதத்தில் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மலேசியாவில் இந்தியா இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகிறார்கள்.இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏஜென்சிகள் மூலம் ஏமாற்றப்பட்டு மற்றும் விசா காலம் முடிந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளது,உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தவிக்கும் தொழிலாளர்கள் பயன்படும் விதத்தில் இந்த பொதுமன்னிப்பு இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இது தாயகம் திரும்ப முடியாமல் தவித்துவரும் பலருக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

இந்த பொதுமன்னிப்பு ஆகஸ்டு 1,2019 (01/08/2019) முதல் டிசம்பர் 31,2019 (31/12/2019) வரையில் அமலில் இருக்கும்.கிரிமினல் வழக்குகளை தவிர்த்து, மற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் பயண ஆவணங்கள் தங்களிடம் இருந்தால் குடிநுழைவுத் துறைக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த பொதுமன்னிப்பு பெற அபராதமாக 700 ரிங்கிட் கட்டணத்தில் செய்ய வேண்டும் . ஆவணங்கள் இல்லாதவர்கள் மலேசியாவில் உள்ள தங்கள் நாடுகளின் தூதரகத்துக்குச் சென்று அவற்றை பெற்று வர வேண்டும். பின்னர் இந்த பொதுமன்னிப்பு பெற பதிவு செய்ய வேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

நீங்கள் இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்த பின்வரும் விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்:

1) நீங்கள் ஆகஸ்ட் 1,2019 முதல் டிசம்பர் 31,2019 வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும்(Amnesty "Back for good" to start from 1 Aug 2019 - 31 Dec 2019)

2)இந்த பொதுமன்னிப்புக்கும் உங்களை அழைத்து சென்ற எந்த முகவர்களும் மற்றும் உங்கள் முதலாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர்களுக்கு பணம் உள்ளிட்ட எதையும் செலுத்த வேண்டாம்(No agents involved - Do NOT pay anything to your employers or agents)

3) நீங்கள் பாஸ்போர்ட் மற்றும் அவசரகால பயண சான்றிதழ் ஆகியவற்றை மலேசியாவில் உள்ள அந்தந்த நாடுகளின் தூதரகத்திலிருந்து பெற வேண்டும்(Get your passport and and emergency certificate from respective embassies)

4)  நீங்கள் தாயகம் திரும்ப தேவையான அனைத்து ஆவணங்களும் சரிசெய்த பிறகு 7 நாட்களில தாயகம்  திரும்பும்  விதத்திலுள்ள ஒரு வழி விமான பயணச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும். (One way return ticket (issued within 7 days from application)

5) மலேசியா பணம் 700 ரிங்கிட் அபராத தொகையாக கட்ட வேண்டும்(RM700 fine)

6)நீங்கள் நேரடியாக மலேசியா குடிநுழைவுத் துறையின் அலுவலகம் செல்ல வேண்டும் இந்த பொதுமன்னிப்புக்காக 80 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.(Go directly to immigration - 80 counters are opened in immigration offices in Peninsular Malaysia). This programme is not for Sabah and Sarawak)

7) டிசம்பர் 31,2019 க்குப் பிறகு ஆவணமற்ற சட்டத்திற்கு புறம்பாக மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டு நபர்களை(தொழிலாளர்களை) கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மலேசியா குடிவரவு துறை மற்றும் காவல்துறை தலைமையில் தீவிரமாக துவங்கும் (Immigration and police will commence crackdown to arrest and detain undocumented migrants after 31 Dec 2019)


மலேசியாவின் இந்த பொதுமன்னிப்பு அரசு சம்பந்தப்பட்ட ஒரே திட்டம் எனவும்
மூன்றாம் தரப்பு இடைத்தரகர்கள் அல்லது முகவரின் ஈடுபாடு இல்லாமல் குடிவரவு துறையால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெளிவு படுத்தினார்







குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.


Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to Malaysia News